Wednesday 2 January 2013

பாடினார் கவிஞர் பாடினார். . .

அந்தக் காலம் தொட்டு இந்தக்காலம் வரையில் ஒன்றில் மட்டும் ஆணும் பெண்ணும் சண்டையிட்டுக் கொள்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆண் ஒசத்தியா இல்லை பெண்ணா...? சினிமாவிலும் இதே கேள்விதான்... அங்கிருந்து ஒரு அழகான பாடல் இந்தக் கேள்விக்கு பதில் சொல்கிறதா பார்ப்போம்...
ஆ..ஆஆ..ஹா... ஹா..ஆ...ஆ..ம்ம்ம்ம்
ஓஹொ ! லஹொஹ் லாஒஹொ...ஹொஹொ..

ஒஹோ ! பாடினார் கவிஞர் பாடினார்
பாடினார் கவிஞர் பாடினார்
மான் என்றால் புள்ளி இல்லை
மயில் என்றால் தோகை இல்லை
தேன் என்றார் மீன் என்றார்
தெரிந்து சொன்னாரா ?
தேன் என்றார் மீன் என்றார்
தெரிந்து சொன்னாரா ?
பாடினார் கவிஞர் பாடினார்
பாடினார் கவிஞர் பாடினார்
பாடினார் கவிஞர் பாடினார்

ஆஆஆ..ஹா... ஹா..ஆ...ஆ..
ஓஹொ லஹொஹ் லாஒஹொஹொஹொ..
ஒஹோ !
பாடினார் கவிஞர் பாடினார்
பாடினார் கவிஞர் பாடினார்
காளையென்றால் கொம்புமில்லை
யானை என்றார் தந்தம் இல்லை
சிங்கம் என்றார் வீரம் என்றார் தெரிந்து சொன்னாரா ?
சிங்கம் என்றார் வீரம் என்றார் தெரிந்து சொன்னாரா ?
பாடினார் கவிஞர் பாடினார்
பாடினார் கவிஞர் பாடினார்
பாடினார் கவிஞர் பாடினார்


ஆஆஆஆ..ஆஆஆஆ...ஆஹாஹா..
கன்னியரை பஞ்சவர்ண கிளிகள் என்றாரே
ஆனால் கன்னியர்கள் கோவைப்பழம் தின்பதில்லையே
கன்னியரை பஞ்சவர்ண கிளிகள் என்றாரே
ஆனால் கன்னியர்கள் கோவைப்பழம் தின்பதில்லையே

ஆடவரை புலிகள் என்று பாடி வைத்தாரே
புலி ஆடு தேடி காடு தேடி ஓடவில்லையே
ஆடவரை புலிகள் என்று பாடி வைத்தாரே
புலி ஆடு தேடி காடு தேடி ஓடவில்லையே

அன்ன நடை நடக்கவில்லை
கண்ணிருந்தும் காணவில்லை
கன்னியர்க்கு மென்மையில்லை
சொன்னவர்க்கு மூளையில்லை

அன்ன நடை நடக்கவில்லை
கண்ணிருந்தும் காணவில்லை
கன்னியர்க்கு மென்மையில்லை
சொன்னவர்க்கு மூளையில்லை

காளையென்றால் கொம்புமில்லை
யானை என்றார் தந்தம் இல்லை
சிங்கம் என்றார் வீரம் என்றார்
தெரிந்து சொன்னாரா ?
பாடினார் கவிஞர் பாடினார்
பாடினார் கவிஞர் பாடினார்
பாடினார் கவிஞர் பாடினார்



ஆஆ...ஆஆஆ....ஆஆஆ..
அச்சமில்லை நாணமில்லை அடக்கமில்லையே
இங்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் பேதமில்லையே
பெண் குலைத்தை கேலி செய்தல் வீரமில்லையே
இதில் பெண்களுக்கும் உங்களுக்கும் பேதமில்லையே

வெற்றி கொள்ளும் ஆண்மையன்றோ
பெற்றெடுக்கும் பெண்மையன்றோ
ஆண்மையின்றி பெண்மையில்லை
பெண்மையின்றி ஆண்மையில்லை
வெற்றி கொள்ளும் ஆண்மையன்றோ
பெற்றெடுக்கும் பெண்மையன்றோ
ஆண்மையின்றி பெண்மையில்லை
பெண்மையின்றி ஆண்மையில்லை

மான் என்றார் பார்வை சொன்னார்
மயில் என்றார் சாயல் சொன்னார்
தேன் என்றார் இனிமை சொன்னார்
தெரிந்து கொள்வோமே !
பாடினார் கவிஞர் பாடினார்
பாடினார் கவிஞர் பாடினார்
பாடினார் கவிஞர் பாடினார்

படம் : தென்றல் வீசும்

No comments:

Post a Comment